நல்லிணக்க நாயகர்கள்-5

1 Min Read

வராகசாமி கோயிலுக்குச் சாத்துல்லாகான் காலக் கொடை

வரலாற்றுத் தகவல்

  • காலம்: டில்லி பேரரசர் பரூக்ஷா பாதுஷா ஆட்சியின்போது, அவரின் கீழ் கர்நாடக நவாபாக இருந்தவர் நவாப் சாத்துல்லாகான் சாகப் அவர்கள்.
  • செய்தி: அவருடைய ஆணையின்படி ராஜா தோடர்மால் மூலம் ஸ்ரீமுஷ்ணம் வராகசாமி என்ற பெருமாள் கோயிலுக்குக் கீழ் புளியங்குடி, புத்தூர், நெடுஞ்சேரி, மலையான்புத்து முதலிய  ஊர்களை மானமாகக் கொடுத்து, அதை நிர்வாகிக்க உள்ளூர்ப் பாளையக்காரருக்கு அதற்குரிய சன்னதும் கொடுத்தார்.
  • நாள்: இச்சிறப்பு மிகு கொடை 1.5.1714 அன்று அளிக்கப்பட்டு அதற்குரிய செப்பேடும் எழுதப்பட்டது.

ஆதாரம்

  • Annual Report on Epigraphy 15(A) 1953, 87(A) 1953
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *